Search The Adonai Blog

Thursday, July 14, 2022

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே

பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே

திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே

உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்

உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே

என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே

---------------

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே

பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே

நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே

அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்

பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே
என்னை முற்றும் ஒப்புவித்தேனே

எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

-------

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.