⏲ 5 mins
இவர்களில் ஒருவருக்கும் தெரியாது
1. பேரழிவில் காப்பாற்றப்பட்டு, பேழையின் கதவு திறக்கப்படும்வரை.
*நோவாவிற்கு* *தெரியாது,* தேவன் தன்னை ஓர் புதிய உலகில் தரையிறக்குவாரென்று.
2. எகிப்திற்கு வரும்வரை *யோசேப்பிற்கு தெரியாது* குழியில் கிடந்த தன்னை, தேவன் எகிப்திலே குபேரனாக்குவாரென்று. ஆதி 41:43.
3. பெத்லகேம் வரும்வரை, *ரூத்திற்கு தெரியாது* போவாசின் மனைவியாவாளென்று. ரூத் 4:10
4. எருசலேம் வரும்வரை,
தென்தேசத்து *ராஜஸ்திரீக்கு தெரியாது* தான் நினைத்ததைவிட சாலமோனின் மகிமை பெரிதென்று. 1இராஜா 10:6-7
5. மீனானது தன்னை நினிவேயின் கரையில் கக்கும்வரை, *யோனாவிற்கு தெரியாது* ஆண்டவர் தன்னை மீண்டும் நினிவே பட்டணத்திற்கே அனுப்புவாரென்று. யோனா 2:10
6. ஜெபவீடு வரும்வரை, *பேதுருவுக்கு தெரியாது* தனக்காக ஒரு கூட்டம் இரவு ஜெபம் செய்கிறார்களென்று. அப் 13:17.
7. பத்மு தீவிற்கு வரும்வரை *யோவானுக்கு தெரியாது* வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை தான் எழுதுவேனென்று.
இப்படி அநேகர் தங்களின் வாழ்வில், முழுமையாக தேவனது திட்டத்தை தெரிந்துக்கொள்ள முடியாதிருந்தும்.
*தேவனோ*
அவர்களின் வாழ்வில், தமது நித்திய திட்டத்தை நிறைவேற்றினார்.
*நாம் என்னசெய்ய வேண்டுமென்று நமக்கு தெரியாமல்போனாலும், நம்மைக்கொண்டு என்ன செய்யவேண்டுமென்று, நம்மை அழைத்த தேவனுக்கு தெரியும்!*
Comments