Search The Adonai Blog

Saturday, September 26, 2020

ஆனந்த துதி ஒலி கேட்கும்

 ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்

ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்

ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ…


1. மகிமைப்படுத்து வேனென்றாரே

மகிபனின் பாசம் பெரிதே

மங்காத புகழுடன் வாழ்வோம்

மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே

குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்

கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ…


2. ஆதி நிலை எகுவோமே

ஆசீர் திரும்பப் பெறுவோம்

பாழான மண்மேடுகள் யாவும்

பாராளும் வேந்தன் மனையாகும்

சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்

சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ…


3. யாக்கோபு நடுங்கிடுவானோ

யாக்கோபின் தேவன் துணையே

அமரிக்கை வாழ்வை அழைப்போம்

ஆண்டவர் மார்பில் சுகிப்போம்

பதறாத வாழ்வும் சிதறாத மனமும் 

பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ…